அப்துல் கலாம் பெயரில் அஜித் ரசிகர்கள்



அன்று ஒரு புள்ளியில் தொடங்கி இன்று ஒரு மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருக்கும் ஒரு நடிகர்,தனது விடா முயற்சியாலும் தனது தன்னம்பிக்கையாலும் உயர்ந்த நடிகர் யாரென்று உங்களிடம் கேட்டால் அனைவரும் சொல்வது தல அஜித்தை தான்.அந்த அளவிற்கு தனது விட முயற்சியால் விஸ்வரூப வெற்றியை கொண்ட நடிகர். இன்று தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
இவரை போலவே தான் இவர்களது ரசிகர்களும்,அன்று ஒரு சிறிய அளவில் தொடங்கி இன்று ஒரு மாபெரும் அணியாக திரண்டு இருக்கின்றனர்.இந்த மாபெரும் அணி அஜித் ரசிகர் மன்றத்தை நற்பணி மாற்றமாக மாற்றி மக்களுக்கு செய்த சேவைகள் அதிகம்.

ரத்த தான முகம்,ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது என நிறைய பணிகள் நடந்திருக்கிறது.அதேபோல் தற்போது சிவகாசி அஜித் ரசிகர்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு தங்களுக்கு அருகே உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்கு பல மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.இதனால் பள்ளிக்கூட நிர்வாகிகளும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதற்காக அப்துல் கலாம் படத்துடன் கூடிய பேனர் அடித்துள்ளனர்.மேலும் இதற்கு கிரீன் காலம் என்ற நடிகர் விவேக்கின் திட்டத்தின் பெயரிலே இந்த பணியை செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments